
புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மறக்காது” என்றும் தெரிவித்துள்ளது.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் இணையத்தில் பேசு பொருளானது. கட்சித் தொண்டர்களின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.