• September 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஈரானில் வேலைக்​காக செல்​லும் இந்​தி​யர்​களை அந்​நாட்​டில் உள்ள ஆள் கடத்​தும் கும்​பல் பிடித்து வைக்​கிறது. பின்​னர் அவர்​களை விடுவிக்க வேண்​டு​மா​னால் கணிச​மான தொகையை அளிக்க வேண்​டும் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தாரை மிரட்​டு​கின்​றனர்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறி​வுறுத்​தலில், ‘‘அனைத்து இந்​திய குடிமக்​களும் வேலை​வாய்ப்பு வாக்​குறு​தி​கள் அல்​லது சலுகைகள் குறித்து அதிக விழிப்​புணர்​வுடன் இருக்க வேண்​டும். குறிப்​பாக, சுற்​றுலா செல்​பவர்​களுக்கு மட்​டும்​தான் இந்​தி​யர்​களுக்கு விசா இல்​லாத அனு​ம​தியை ஈரான் அரசு அனு​ம​திக்​கிறது. சுற்​றுலா தவிர்த்த மற்ற வர்த்​தகம், வேலை போன்ற விஷ​யங்​களுக்கு கண்​டிப்​பாக விசா அவசி​யம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்​களுக்​கும் குற்ற கும்​பல்​களுக்​கும் தொடர்பு இருக்​கலாம். எனவே, இந்​தி​யர்​கள் மோசடி​யில் சிக்கி கொள்ள வேண்​டாம்’’ என்று எச்​சரிக்கை அளித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *