• September 21, 2025
  • NewsEditor
  • 0

ராயசோட்டி: ஆந்​திர மாநிலம், அன்​னமைய்யா மாவட்​டம், ராயசோட்​டி​யில் பெய்த கன மழை காரண​மாக வெள்​ளிக்​கிழமை இரவு 8 மணி​யள​வில் எஸ்​.எம். நகரில் கால்​வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரண​மாக பலரது வீடு​களில் மழை நீரும் புகுந்​தது. இதனால் பாதிக்​கப்​பட்ட ஷேக் முன்னி (28) எனும் பெண் தனது 4 வயது மகனுடன் வீட்​டில் இருந்​தார். அப்​போது மழை வெள்​ளத்​தில் மகன் அடித்துச் செல்​வதை தடுக்க அவரும் வெள்​ளத்​தில் இறங்​கி​னார். இதனால் இரு​வரும் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதனை பார்த்த பக்​கத்து வீட்​டுக்​கார​ரான கணேஷ் (25) என்​பவர் இவர்​கள் இரு​வரை​யும் காப்​பாற்ற வெள்​ளத்​தில் இறங்​கி​னார். ஆனால் அவர் மின்​சா​ரம் பாய்ந்து உயி​ரிழந்​தார். பின்னர், நள்​ளிரவு நேரத்​தில் 3 பேருமே சடல​மாக மீட்​கப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *