• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாணவர்​களிடம் சாதிய உணர்வு , பாலின பாகு​பாடு போன்ற பிற்​போக்​குத்​தனங்​கள் தலை​யெடுக்​காமல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் முப்​பெரும் விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில்புதி​தாக தேர்​வுசெய்​யப்​பட்ட 2,715 ஆசிரியர்​களுக்​கான நுழைவுநிலை பயிற்​சியை முதல்​வர் தொடங்​கி​வைத்​தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்​பீட்​டில் புதி​தாக கட்​டப்​பட்ட 76 அரசு பள்​ளிக்​கட்​டிடங்​களை திறந்​து​வைத்த அவர், ரூ.310 கோடி​யில் 262 அரசு பள்​ளி​களுக்கு புதிய கட்​டிடங்​கள் கட்​டு​வதற்​கும், பாரத சாரண-​சா​ரணி​யர் தலைமை அலு​வலக கட்​டிடத்​துக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *