
மதுரை: புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் மதுரை விராட்டிபத்தில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிந்துவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.