
கொச்சி: கேரளாவின் குட்டிப்புரத்தை சேர்ந்தவர் சைதலவி. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பார்வையற்ற இவர் மசூதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்தார். இதன்பிறகு 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது 3-வது திருமணத்துக்கு தயாராவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவனாம்சம் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசாரித்தார். ஜூபைரியா நீதிமன்றத்தில் கூறும்போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்தில் ரூ.25,000 -க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.