
புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்வால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்தது.
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி நாரா வசம் 2.26 கோடி பங்குகள் (24.37%) உள்ளன.