
சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத மமக, கொமதேக உள்ளிட்ட 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29–ன்கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, வருமானவரி விலக்கு, பொதுதேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, சின்னங்கள் ஒதுக்கீடு, நட்சத்திர பிரச்சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடியும். பதிவு செய்யப்பட்ட கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டபடி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். பல கட்சிகள், தேர்தல்ஆணையத்தால் நடத்தப்படும்பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.