
நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம். வரும் தேர்தலில் நீங்களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் சவால் விடுத்தார்.
நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.