
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
120 சட்டமன்ற தொகுதிகளை கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளையும், தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததை பட்டியலிட்டும் பேசி வருகிறார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18.09.2025, 19.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சில காரணங்களினால் சுற்றுப்பயணம் தேதி 19.09.2025, 20.09.2025 மற்றும் 21.09.2025 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால்,
நாளை (20.09.2025) நடைபெற இருந்த நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரம் மற்றும் நாளை மறுநாள் (21.09.2025) நடைபெற இருந்த திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கான பிரச்சார பயணம்,
04.10.2025 அன்று நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், 05.10.2025 அன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs