• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தின்​போது பெண் வழக்​கறிஞர்​கள் தாக்​கப்​பட்​ட​தாக, போலீ​ஸார் மீதான குற்​றச்​சாட்டு குறித்து ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்க உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி 5-வது மற்​றும் 6-வது மண்​டலத்​தில் தூய்​மைப் பணி​களுக்​கான பொறுப்பை தனி​யாரிடம் ஒப்​படைத்​ததை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள், மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர், உயர் நீதி்மன்ற உத்​தர​வுப்​படி போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மை பணி​யாளர்​களை போலீ​ஸார் அப்​புறப்​படுத்​தி​ய​போது பெண் வழக்​கறிஞர்​கள் உள்​ளிட்ட 12 வழக்​கறிஞர்​களை போலீ​ஸார் தாக்​கிய​தாகக் கூறி, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக ஓய்​வு​ பெற்ற நீதிபதி வி.​பார்த்​திபன் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க உத்​தர​விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *