
திருவாரூர்: “நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என பல கோடி ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், “இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் பேசியது: “திருவாரூர் என்றாலே தியாராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகத்துக்கு வரும். ஏனெனில், அது இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியது நான்தான் என்று மார்தட்டி சொன்னது யார் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.