• September 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் சிபிசிஎல் நிறு​வனத்​தின் சிஎஸ்​ஆர் நிதி மூலம், 300 மாற்​றுத் திற​னாளிகளுக்​கு, உதவி உபகரணங்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். சென்னை பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறு​வனத்​தின் சமூக பங்​களிப்பு நிதி​யின் கீழ், ரூ.75 லட்​சம் மதிப்​பீட்​டில் 300 மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கால்​கள், பேட்​டரி​யால் இயங்கும் 4 சக்கர நாற்​காலிகள் உள்​ளிட்ட உதவி உபகரணங்​களை வழங்​கும் நிகழ்ச்சி திரு​வொற்​றியூரில் நேற்​று​ முன்​தினம் நடைபெற்றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை தாங்கி மாற்​றுத் திற​னாளி​களுக்கு உதவி உபகரணங்​களை வழங்​கி​னார். தொடர்ந்து சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், கழி​வுநீரகற்று பணி மேற்​கொள்​வதற்​காக, ரூ.1.50 கோடி மதிப்​பில் நவீன இயந்​திரம் பொருத்​தப்​பட்ட கழி​வுநீரகற்று வாக​னத்தை கொடியசைத்து அனுப்பி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *