
சென்னை: பதவி உயர்வுக்கு தகுதியான 26 பேரின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கூறி, மின்வாரிய தலைமையகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, அவர்கள் பணிபுரியும் வட்டத்தின் தலைமை அலுவலர், சம்பந்தப்பட்ட ஊழியரின் திறன் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவற்றுடன் பட்டியல் தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். அதனடிப்படையில், தேர்வு செய்யப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படும்.