
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தலைநகர் கொல்கத்தாவில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தலைமையில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அரசியல் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது.