
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசுப் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் அரசுப் பேருந்து மிகவும் சேதம் அடைந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் கட்டணமில்லா பேருந்து சனிக்கிழமை காலை மம்சாபுரம் நோக்கி புறப்பட்டது. ஓட்டுநர் ராஜேந்திரன் பேருந்தை இயக்கினார். பேருந்தில் நடத்துநர் சோலைராஜனும் 7 பெண் பயணிகளும் இருந்தனர்.