
திருச்சி: தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சிக்கு வருகை புரிந்தார். பின்னர், அவர், நாகை பிரச்சாரத்திற்கு கருப்பு காரில் சென்றார். நாகை, திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு இந்த விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.
கடந்த செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் துவங்குவதற்காக தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தவெக தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.