
புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அஜய் எ அன் டோல்டு ஸ்டோரி ஆப் யோகி’ எனும் பாலிவுட் திரைப்படம் நேற்று வெளியானது. இதைக் காணத் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் கோஷத்துடன் பரவசப்படுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான அஜய் படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டிக்கெட் வாங்கிய அவர்கள் அரங்குகளில் நுழைந்தவுடன் ’ஜெய் ஸ்ரீராம்’, ’யோகி, யோகி’ எனக் கோஷங்களை எழுப்பினர்.