
எம்.ஜி.ஆரின் நூறாவது படம், ‘ஒளிவிளக்கு’. அவர் படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதனால் அவருடைய நூறாவது படத்தைத் தயாரிக்க அப்போது முன்னணியில் இருந்த பல நிறுவனங்கள் போட்டியிட்டன.
ஆனால், அந்த வாய்ப்பை, எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனத்துக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணம், அவருடைய முதல் படமான ‘சதிலீலாவதி’யின் கதை, எஸ்.எஸ்.வாசனுடையது. அதனால் தனது நூறாவது படத்தைப் பிரம்மாண்ட நிறுவனமான ஜெமினி தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார், எம்.ஜி.ஆர். ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப் படமாக உருவானது.