• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆகம கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது. ஆகம விதி​களைப் பின்​பற்​றும் கோயில்​களில் அர்ச்​சகர்​களை நியமிக்​கும்​போது ஆகம விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் எனக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் உள்​ளிட்​டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் ஆகம விதி​களை கடைபிடிக்​கும் கோயில்​களை​யும், ஆகமம் அற்ற கோயில்​களை​யும் கண்​டறிய சென்னை உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு​வுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்​தது. அத்​துடன் ஆகமம் அல்​லாத கோயில்​களில் அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *