
மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்பி. வரும் 22-ம் தேதிக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை 125 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிறைவு செய்துள்ளார். அவரது 5-ம் கட்ட பிரச்சாரப் பயணம் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.