• September 20, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கரூர் பேருந்து நிலை​யம் அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பொதுக்​கூட்​டத்​துக்கு அனு​மதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்​பி. வரும் 22-ம் தேதிக்​குள் முடி​வெடுக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கரூர் மாவட்ட அதி​முக அவைத் தலை​வர் திருவிக, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை 125 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் நிறைவு செய்​துள்​ளார். அவரது 5-ம் கட்ட பிரச்​சா​ரப் பயணம் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *