
சென்னை: திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் இருந்தபோது மயங்கி விழுந்தார்.
அதைத்தொடர்ந்து, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல், வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நள்ளிரவு முதல், அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.