• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தால் 300 ஆண்​டு​கள் பழமை​யான 40 கோடிக்​கும் அதி​க​மான ஆவணங்​கள் பாதுகாப்பாக பராமரிக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் கோவி. செழியன் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஆவணக் காப்​பகம், தமிழ்​நாடு ஆவணக் காப்​பகம் மற்​றும் வரலாற்று ஆராய்ச்சி மன்​றம் சார்​பில் 50-வது தேசிய ஆவணக் காப்​பாளர்​கள் குழுக் கூட்​டம் (பொன்​விழா) சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி. செழியன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்றார்.

‘ஆங்​கிலேய ஆட்​சிக்கு எதி​ராக 1857-ம் ஆண்​டுக்கு முன்பு தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற போராட்​டங்​கள், தியாகங்​கள்’, ‘மைசூர் போர்​களும், தமிழ்​நாடு கைப்​பற்​றப்​பட்ட முறை​களும்’ ஆகிய 2 ஆங்கில நூல்​களை அவர் வெளி​யிட்​டார். மக்​கள் வசதிக்​காக பழமை​யான ஆவணங்​கள் கணினிம​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​காக புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட www.digitamilnaduarchives.tn.gov.in என்ற இணை​யதளத்​தை​யும் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *