• September 19, 2025
  • NewsEditor
  • 0

தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.

​திருச்சி மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 65 வார்​டு​களில் 50 வார்​டு​களை தன்​வசம் வைத்​திருக்​கிறது திமுக. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதிமுகவுக்கு மூன்று கவுன்​சிலர்​கள் மட்​டுமே இருப்​ப​தால் இங்கு எதிர்க்​கட்சி வரிசையி​லிருந்து எதிர்ப்​புக் குரல்​கள் அவ்​வள​வாய் வரு​வ​தில்​லை. அதை​யும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே செய்து கொண்​டிருப்​ப​தால் விளை​யாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்​டிருக்​கிறது மாநக​ராட்​சி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *