
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொது மக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார்.