
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் பாட்னாவில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம், அரசியல் கட்சிகள் இடையிலான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றிருக்கிறது.