• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில், நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்​களில் ரயில் தண்​ட​வாளத்தை அத்​து​மீறி கடக்க முயன்​றது தொடர்​பாக, 944 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் இருந்து ரூ.4.45 லட்​சம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் பெரிய கோட்​ட​மாக, சென்னை ரயில்வே கோட்​டம் விளங்​கு​கிறது. தமிழகத்​தின் வடமாவட்​டங்​கள் மற்​றும் தெற்கு ஆந்​திரா வரை ரயில்வே எல்​லை​யாக​வும், மொத்​தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதை​யாக​வும் உள்​ளது.

சென்​னை​யில், கடற்​கரை – தாம்​பரம் – செங்​கல்​பட்​டு, சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் மற்​றும் கும்​மிடிப்​பூண்​டி, கடற்​கரை – வேளச்​சேரி ஆகிய பிர​தான வழித் தடங்​களில், தின​மும் 630-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களின் சேவை​ இயக்​கப்​படு​கின்​றது. இதுத​விர, 150-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன. ரயில் போக்​கு​வரத்து அதி​கம் உள்ள இவ்​வழித் தடங்​களில், தண்​ட​வாளத்தை கடக்​கும் நபர்​கள் சிலர் அவ்​வப்​போது ரயி​லில் அடிபட்டு இறக்​கும் சம்​பவம் நடை​பெறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *