
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வ நாதர் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் சேவைத் திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோயிலின் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த சரஸ்வதி சார்பில் சஹஸ்ரசண்டி வழிபாடு, அகில பாரத சன்யாசி பரிஷத் நடத்தப்பட்டன. உத்தர பிரதேச முன்னாள் அமைச்சரும் தெற்கு வாராணசியின் எம்எல்ஏவுமான நீலகாந்த் திவாரி தலைமையில் 51 அறிஞர்களின் உதவியுடன் யாகம் நடத்தப்பட்டது. மேலும் நீலகாந்த் திவாரி தலைமையில் 51 குவிண்டால் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.