• September 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழில் நிறு​வனங்​கள், ஊழியர்​கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டத்​தில் இணைவது குறித்த விழிப்​புணர்வு முகாம் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் நடந்​தது. தொழிற்​சாலைகள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களின் பதிவை ஊக்​குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்​டத்தை தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்​கி​யுள்​ளது.

இத்​திட்​டம் குறித்து மாவட்​டந்​தோறும் விழிப்​புணர்வு முகாம் நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்​தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்​டம் விழிப்​புணர்வு முகாம் நேற்று நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு தொழிலா​ளர்​கள் அரசு காப்​பீட்​டுக் கழகத்​தின் சென்னை மண்டல இயக்​குநர் ஏ.வேணுகோ​பால் தலைமை தாங்கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *