
கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது. தமிழகத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், அங்கிருந்து குப்பை, கழிவுகள் இரவில் கொண்டுவரப்பட்டு, தமிழக வனப்பகுதியில் அடிக்கடி கொட்டப்படுகின்றன.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கம்பம்மெட்டு மலையடிவாரம் புதுக்குளம் பகுதியில், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மூட்டை மூட்டையாக கேரள குப்பை கொட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.