• September 19, 2025
  • NewsEditor
  • 0

குன்னூர்: வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்​பேற்​றார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி 1905-ல் குவெட்​டா​வில் நிறு​வப்​பட்​டது. பின்​னர் 1947-ல் அது வெலிங்​ட​னுக்கு மாற்​றப்​பட்​டது. இந்​தக் கல்​லூரி இந்​தி​யா​வின் முப்​படை அதி​காரி​களுக்​கான முன்​னணி பயிற்சி நிறு​வன​மாகும்.

இங்​கு, ராணுவம், கடற்​படை, விமானப்​படை அதி​காரி​களுக்​கும், நட்பு நாடு​களின் அதி​காரி​களுக்​கும் தலை​மைத்​து​வம், கூட்​டாக செயல்​படும் திறன், வியூ​கங்​கள் வகுத்​தல், பணி​யாளர் நிர்​வாகம் ஆகிய​வற்​றின் உயர் நுணுக்​கங்​களில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இக்​கல்​லூரி​யின் முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்​பேற்​றார். இப்​பொறுப்​பில் இருந்த லெப்​டினன்ட் ஜெனரல் வீரேந்​திர வாட்​ஸ், லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி​யிடம் பொறுப்​பு​களை ஒப்​படைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *