• September 19, 2025
  • NewsEditor
  • 0

கோவை: தமிழகத்​தி​லும் வாக்​காளர் பட்​டியல் சீர்​திருத்​தம் அவசி​யம் என்று பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் ஆளுநரு​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​திய நிதி​யமைச்​சர் நிர்மலா சீதா​ராமன், பிரதமர் மோடி​யின் வழி​காட்​டு​தலின்​படி ஜிஎஸ்​டியை குறைத்​து, பொருளா​தார புரட்​சியை ஏற்​படுத்தி உள்​ளார். அதற்கு தமிழக அரசு நன்றி கூற​வில்​லை. மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் நிறைவடை​யும் தரு​வா​யில் உள்ளன. தவெக தலை​வர் விஜய் எங்​கள் கட்சி குறித்து பேசுவதை​விட. திமுக மீதான எதிர்ப்​பைக் காட்​டு​வ​தில் தீவிர​மாக இருக்க வேண்​டும்.

அமித்​ஷாவை சந்​தித்​து​விட்டு வெளியே வந்​த​போது, கர்ச்​சீப்​பால் முகத்தை துடைத்​த​தாக பழனி​சாமி தெளிவுபடுத்​தி​யுள்​ளார். அதை வைத்து அரசி​யல் செய்​வது சரியல்ல. பாஜக எப்​போதும் மக்​களுக்கு நன்மை மட்​டுமே செய்து கொண்​டிருக்​கிறது. எனவே, மக்​கள் பாஜக​வுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்​டும். திமுக கூட்​டணி மீது, அவர்​களுக்கே நம்​பிக்கை இல்​லை. அதனால்​தான் எதிர்க்​கட்சி கூட்​ட​ணியை விமர்​சிக்​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *