
சென்னை: சாராயம் விற்ற பணத்தில்தான் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வந்தபோது, ‘இந்த மாவட்டத்தில் 2 திருடர்கள் இருக்கிறார்கள்.
பெரிய திருடன் செந்தில்பாலாஜி. சின்ன திருடன் செந்தில்பாலாஜி தம்பி’ என பேசியிருந்தார். தற்போது அதே கரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ‘உலகமகா உத்தமர் செந்தில்பாலாஜி. உலகத்தில் சிறந்த மனிதர் செந்தில் பாலாஜி தம்பி’ என சான்றிதழ் கொடுத்துள்ளார். யாருக்கு திருடர், ஊழல் பட்டம் கொடுத்தாரோ, அவர்களை வைத்து இன்று முப்பெரும் விழா நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.