
மதுரை: கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சரியாக நடவடிக்கை எடுக்காத கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, அக்கோயிலில் பட்டியலின மக்களைஅனுமதிக்கக் கோரியும், கோயிலை மூடுவது தொடர்பான கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.