
மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றக் கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலாளர், இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.