• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் இருந்து 160 பேருடன் பெங்​களூரு புறப்​பட்ட விமானத்​தில், திடீரென்று இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் மீண்​டும் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டது. சென்​னை​யில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்​களூர் செல்ல வேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம், தாமத​மாக இரவு 7.50 மணிக்கு புறப்​பட்​டது. 160 பயணி​கள், 5 விமான ஊழியர்​கள் உட்பட 165 பேர் இருந்​தனர்.

விமானம் சென்​னை​யில் இருந்து புறப்​பட்​டு, காஞ்​சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்​டிருந்த போது, திடீரென, விமானத்​தில் இயந்​திர கோளாறு ஏற்​பட்​டுள்​ளது. இதை கண்​டு​பிடித்த விமானி, உடனடி​யாக சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *