
சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அடுத்த 9 மாதத்துக்குள் அனைத்து சுயஉதவிக் குழு மகளிருக்கும் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4.76 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 54 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் சுயஉதவிக் குழு மகளிரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.