
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாரிடம் இந்தியாவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து தோஹாவில் அல் ஜசீரா ஊடகம் கேள்வி எழுப்பியது.
இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு, “இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தியா இது இருதரப்பு விஷயம் என்று கூறி திட்டவட்டமாக மறுத்து வருகிறது.