
மதுரை: ‘ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல’ என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அய்யா கண்ணு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர், விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தச் செல்வதை தடுக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், “டெல்லியில் போராட்டம் நடத்த நானும், எனது சங்க உறுப்பினர்களும் ரயிலில் பயணம் செய்ய முயன்றபோது போலீஸார் எங்களை கட்டாயப்படுத்தி இறக்கி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், “டெல்லியில் மனுதாரர் பல ஆண்டுகளுக்கு முன் 100 நாட்கள் போராட்டம் நடத்தினார்.