• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பெரி​யாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்​பில், சமூக நீதி நாளாக அனுசரிக்​கப்​பட்​டது. அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். சமூக அடக்​கு​முறை​களை எதிர்த்து போராடிய​வர் என புகழாரம் சூட்​டினர்.

பெரி​யாரின் 147-வது பிறந்த நாள் தமிழகம் முழு​வதும் நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. தமிழக அரசு பெரி​யார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்​டாடியது. திருச்சி மத்​திய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள பெரி​யாரின் சிலைக்கு அருகே மலர்​களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு முதல்​வர் ஸ்​டா​லின் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, முதல்​வர் தலை​மை​யில் அனை​வரும் சமூக நீதி நாள் உறு​தி​மொழி ஏற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *