
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு மிதவை கப்பல் மற்றும் தோணிகள் மூலம் கட்டுமான பொருட்கள், காய்கறிகள் என பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லக் கூடிய மிதவை கப்பல் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மிதவை கப்பலின் அடியில் உள்ள டேங்க் பொதுவாக பேலஸ்ட் டேங்க் (Ballast Tank) என்று அழைக்கப்படுகிறது. இதுதான், கப்பலின் நிலைத் தன்மையை அதிகரித்து, கடலில் கப்பல் மிதக்க முக்கிய பாக மாகும்.