
சென்னை: தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை என்றால் போராடுவதை தவிர வழியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவுதின சொற்பொழிவு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது: மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்படும் போராட்டம் வெல்ல வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்பட்டு நிற்கிறது.