• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்​திய அரசு விடு​வித்​துள்​ளது. ஊரக வளர்ச்​சி, பஞ்​சா​யத்து ராஜ் மற்​றும் நீர்வள அமைச்​சகங்​களின் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்​பு​களுக்​காக 15-வது நிதிக்​குழு​வின் மானி​யங்​களை விடுவிக்க மத்​திய அரசு, மாநிலங்​களுக்கு பரிந்​துரை செய்​து, நிதி​யமைச்​சகத்​தின் மூலம் நிதி விடுவிக்​கப்​படு​கிறது. ஒதுக்​கப்​பட்ட மானி​யங்​கள், நிதி​யாண்​டில் 2 தவணை​களாக விடுவிக்க பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

தொகுப்​பற்ற மானி​யங்​களை சம்​பளம் மற்​றும் இதர செல​வு​கள் தவிர, அரசி​யல் சாசனத்​தின் 11-வது பட்​டியலில் குறிப்​பிட்​டுள்​ளபடி, அந்​தந்​தப் பகு​தி​களின் தேவை​களுக்​காக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களும், பஞ்​சா​யத்து ராஜ் அமைப்​பு​களும் பயன்​படுத்​தும். தொகுப்பு மானி​யங்​கள், தூய்​மைக்​கான அடிப்​படை சேவை​கள், திறந்​தவெளிக் கழிப்​பிடம் இல்​லாத நிலை​யைப் பராமரித்​தல் ஆகிய​வற்​றுக்​காக பயன்​படுத்​தப்​படும்.இதில் வீட்​டுக் கழி​வு​களை நிர்​வகித்​தல் மற்​றும் சுத்​தி​கரித்​தல் ஆகியவை இடம் பெற்​றுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *