
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்புக்கு முன்னதாகவே சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிட்டார். அதில், “எனக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த என் நண்பர், அதிபர் ட்ரம்புக்கு நன்றி. உங்களைப் போலவே, இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நானும் உறுதியாக இருக்கிறேன். ரஷ்யா-உக்ரைன் போருக்கு அமைதி தீர்வு கிடைக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.