
சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்நிலையில், ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரங்கள் அந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.