• September 17, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: “அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “2019-ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல; எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026 தேர்தலிலும் நிச்சயம் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *