• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.17, 18), பெரும்பாலான இடங்களிலும், 19-ம் தேதி சில இடங்களிலும், 20 முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *