
சென்னை ரெட்டேரி பகுதி அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாசகர் ஒருவர் இந்து தமிழ் திசை நாளிதழின் பிரத்தியேக அழைப்பு எண் உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது: சென்னை மாதவரம், 32-வது வார்டுக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் பிவிஆர் புட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் உணவு வணிக வளாகம் உள்ளது. இந்த இடத்தில் மத்திய சென்னை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.