
புதுடெல்லி: பிஎம்டபுள்யூ கார் விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ககன்ப்ரீத் கவுரை செப்டம்பர் 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் அவர்களின் பைக் மீது பின்னால் இருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த நவ்ஜோத் சிங் உயிரிழந்தார், அவரின் மனைவி சந்தீப் கவுர் காயமடைந்தார்.