
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் ஏஐ வீடியோ தொடர்பான சர்ச்சையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு பாட்னா உயர் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் தொடர்பான ஏஐ வீடியோவை பிஹார் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி தூங்கும் போது, அவரது கனவில் வரும் தாய் ஹீராபென் மோடி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை திட்டுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்தது. மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மீது பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.